Local Swiss News

ஐரோப்பாவை மூடும் சகாரா தூசி! விடுமுறைக்கு செல்லும் சுவிஸ் மக்களுக்கு எச்சரிக்கை

ஐரோப்பாவை மூடும் சகாரா தூசி! விடுமுறைக்கு செல்லும் சுவிஸ் மக்களுக்கு எச்சரிக்கை

ஐரோப்பாவை மூடும் சகாரா தூசி! விடுமுறைக்கு செல்லும் சுவிஸ் மக்களுக்கு எச்சரிக்கை…

சுவிஸ் மக்களின் பிரபலமான விடுமுறை நாடுகளான தெற்கு ஐரோப்பாவில், சகாரா பாலைவனத் தூசி மாசுபாடு கவலைக்கிடமாக அதிகரித்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.

Paul Scherrer Institute வெளியிட்ட ஆய்வின்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 சகாரா தூசி புயல்கள் ஐரோப்பாவை கடந்து செல்கின்றன. ஆனால் தற்போது அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு தூசி நிகழ்வின் தீவிரம் முன்பைவிட மிகவும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக தெற்கு ஐரோப்பாவில், காற்றில் உள்ள நுண்துகள்களின் அளவு மத்திய மற்றும் வடக்கு ஐரோப்பாவை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் சகாரா தூசி மாசுபாடு 10 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும், ஆல்ப்ஸ் பனிப்பாறை தரவுகள் கடந்த 150 ஆண்டுகளில் இந்த மாசுபாடு இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

19j 2

சுவிட்சர்லாந்தில் நிலைமை சற்றே மாறுபட்டதாக உள்ளது. ஆல்ப்ஸ் மலைத்தொடர் இயற்கைத் தடுப்பாக செயல்படுவதால், தெற்கிலிருந்து வரும் தூசியின் ஒரு பகுதி தடுக்கப்படுகிறது. இதனால், சுவிஸில் தூசி மாசுபாடு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.

ஆனால், இதயம் மற்றும் நுரையீரல் நோயாளிகள், முதியவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சனையுள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். தூசி அதிகமாக இருக்கும் நாட்களில் வெளிப்புற உடற்பயிற்சியைத் தவிர்த்து, தேவையற்ற வெளிப்பயணங்களையும் குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலைமைக்கு முக்கிய காரணமாக காலநிலை மாற்றமும், மாறிவரும் காற்றின் போக்கும் குறிப்பிடப்படுகின்றன. இதனால் எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன் வழியாக தூசி எச்சரிக்கை வழங்கும் அமைப்புகளையும் அறிமுகப்படுத்த ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button