உயிர்ப்பிக்க போராடியும் பலனில்லை… ஜெனீவா ஏரியில் மீண்டும் ஒரு உயிரிழப்பு!
உயிர்ப்பிக்க போராடியும் பலனில்லை... ஜெனீவா ஏரியில் மீண்டும் ஒரு உயிரிழப்பு!

உயிர்ப்பிக்க போராடியும் பலனில்லை… ஜெனீவா ஏரியில் மீண்டும் ஒரு உயிரிழப்பு!
சுவிட்சர்லாந்தின் வௌட் மாகாணத்தில், ஜெனீவா ஏரியில் நீச்சலுக்குச் சென்ற 46 வயதுடைய ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை பிற்பகல் சுமார் 1.45 மணியளவில், ரோல் பகுதியில் உள்ள குளியல் நிலையத்திற்கு அருகே, ஜெனீவா ஏரியில் ஒருவர் அசைவின்றி மிதப்பதாக வௌட் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் உடனடியாக அந்த நபரை கரைக்குக் கொண்டு வந்து முதலுதவி அளித்தனர். தொடர்ந்து விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் உயிர்ப்பிக்கும் முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்ட போதிலும், பிரான்சில் வசித்து வந்த 46 வயதுடைய பிரேசில் நாட்டவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிய அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில், ஏரி காவல்துறை மற்றும் தடயவியல் பிரிவினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில், தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக நீச்சல் விபத்துகளின் அபாயம் அதிகரித்துள்ளதாக வௌட் மாகாண காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நீரில் மெதுவாக இறங்கவும், அதிக உணவு உட்கொண்ட உடனே நீந்துவதைத் தவிர்க்கவும், குழந்தைகளை எப்போதும் கண்காணிக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.





