Local Swiss News

கோல்டாச்சில் பரபரப்பு! பள்ளி உடனடியாக காலி… ஆயுதத்துடன் நபர் நடமாட்டமா?

கோல்டாச்சில் பரபரப்பு! பள்ளி உடனடியாக காலி… ஆயுதத்துடன் நபர் நடமாட்டமா?

கோல்டாச்சில் பரபரப்பு! பள்ளி உடனடியாக காலி… ஆயுதத்துடன் நபர் நடமாட்டமா?

செயின்ட் கேலன் மாகாணத்தின் கோல்டாச்சில், பள்ளி விழா நடைபெற்ற பின்னர் திடீரென பெரும் போலீஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10 மணிக்குப் பின்னர், அவசர அழைப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு பல தகவல்கள் கிடைத்ததாக செயின்ட் கேலன் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்தில் அதிகளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விழா நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு பள்ளியும் பாதுகாப்பு காரணங்களுக்காக காலி செய்யப்பட்டுள்ளது.

2368bc

இதற்கிடையில், சம்பவ இடத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அந்த துப்பாக்கிச் சத்தம் யாரால் ஏற்படுத்தப்பட்டது என்பது இதுவரை தெளிவாகவில்லை.

மேலும், கத்தியுடன் ஆயுதம் ஏந்திய ஒருவர் அப்பகுதியில் காணப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலைமை இன்னும் முழுமையாகத் தெளிவாகாத நிலையில், அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகள் மற்றும் உணவகங்களுக்குள் தஞ்சமடையுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

முக்கியமாக, இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் தகவலில், “அனைத்து குழந்தைகளும் கட்டிடங்களுக்குள் பாதுகாப்பாக உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சம்பவம் தொடர்பான தகவல்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில், தற்சமயம் பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என பெற்றோருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோல்டாச்சில் நடந்த இந்த பரபரப்பான சம்பவத்தின் முழு பின்னணி என்ன? போலீஸ் விசாரணையில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button