சுவிஸை உலுக்கிய கட்டுமான விபத்து… அலட்சியத்தால் நடந்த சோகம் என அதிர்ச்சி தகவல்!
சுவிஸை உலுக்கிய கட்டுமான விபத்து... அலட்சியத்தால் நடந்த சோகம் என அதிர்ச்சி தகவல்!

சுவிஸை உலுக்கிய கட்டுமான விபத்து… அலட்சியத்தால் நடந்த சோகம் என அதிர்ச்சி தகவல்!
சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணம் பிரில்லி Prillyபகுதியில், கடந்த 2024-ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய சாரக்கட்டு விபத்து தொடர்பாக முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மூன்று கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன், 11 பேர் காயமடைந்தனர். தற்போது, அந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் மீது கவனக்குறைவால் மரணம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின்படி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் Roth Echafaudages என்ற சாரக்கட்டு நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள். அவர்கள் மீது கவனக்குறைவான மரணம், கவனக்குறைவால் உடல் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட நிபுணர் அறிக்கையில், சாரக்கட்டின் திட்டமிடல், கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளில் கடுமையான குறைபாடுகள் இருந்ததாகவும், சில பணியாளர்களிடம் தேவையான தகுதிகள் கூட இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், அந்த கட்டுமானத் தளத்தில் பணியாற்றிய மற்ற நிறுவனங்களின் பங்கும் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்று அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் தனது தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு, சுவிட்சர்லாந்தில் கட்டுமானத் துறையின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் தீவிரமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது





