Saturday, 19 September 2026
Local Swiss News

பல மீட்டர் உயரத்துக்கு எழுந்த தீச்சுவாலை! 5 கார்கள் உட்பட பல வாகனங்கள் தீயில் சேதம்!

dc5

பல மீட்டர் உயரத்துக்கு எழுந்த தீச்சுவாலை! 5 கார்கள் உட்பட பல வாகனங்கள் தீயில் சேதம்!

சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாகாணத்தில் அடுக்குமாடிக் கட்டிடத்தின் தரைக்கீழ் வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

ஹெர்ஸ்நாச் நகரில் வியாழக்கிழமை பிற்பகல் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பிற்பகல் 2.15 மணிக்கு சற்று முன்னதாக, கிராம மையத்தில் உள்ள தரைக்கீழ் பார்க்கிங்கில் தீப்பிடித்ததை ஒருவர் கவனித்து உடனடியாக தீயணைப்புப் படைக்கு தகவல் வழங்கினார்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது, முழு பார்க்கிங் பகுதியும் தீப்பிழம்புகளால் சூழப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பல மீட்டர் உயரத்துக்கு தீச்சுவாலைகள் எழுந்ததுடன், கரும்புகை வானத்தை நோக்கி எழுந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்தில் 5 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 2 மின்சார ஸ்கூட்டர்கள் சேதமடைந்துள்ளன.

dc5

அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஆனால் தீயால் ஏற்பட்ட கடுமையான புகை மற்றும் கரி சேதம் காரணமாக, அடுக்குமாடிக் கட்டிடத்தில் உள்ள பல குடியிருப்புகள் தற்போது தற்காலிகமாக வசிக்கத் தகுதியற்ற நிலையில் உள்ளன.

மேலும், நீர் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்காக நகராட்சி அவசர தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது.

ஹெர்ஸ்நாச்-யூக்கன், டென்ஸ்பூரன்-ஆஸ்ப், ஓபரெஸ் ஃபிரிக்டால் மற்றும் ஃபிரிக் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தீ அடுக்குமாடிக் கட்டிடத்தின் மேல்பகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தினர்.

தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

Your email address will not be published. Required fields are marked *