மீண்டும் அதிர்ச்சி சம்பவம்… சிகிச்சை மையத்திலிருந்து தப்பிய பதின்பருவத்தினர்!
மீண்டும் அதிர்ச்சி சம்பவம்... சிகிச்சை மையத்திலிருந்து தப்பிய பதின்பருவத்தினர்!

மீண்டும் அதிர்ச்சி சம்பவம்… சிகிச்சை மையத்திலிருந்து தப்பிய பதின்பருவத்தினர்!
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணம், உய்டிகான் பகுதியில் உள்ள இளம் குற்றவாளிகளுக்கான சீர்திருத்த மற்றும் தடுப்புக்காவல் மையத்திலிருந்து, ஒரு பதின்பருவ இளைஞர் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்த தப்பியோட்டம் இடம்பெற்றதாக சூரிச் நீதி மற்றும் உள்விவகார இயக்குநரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
தப்பியோடியவர், சிறுவர் சீர்திருத்த திட்டத்தின் கீழ் அந்த மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தார். தற்போது அவரை கண்டுபிடிக்க சூரிச் மாகாண காவல்துறையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

விசாரணை நடைபெற்று வருவதால், அவர் எவ்வாறு தப்பினார் என்பது உள்ளிட்ட மேலதிக தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.
MZU எனப்படும் இந்த மையம், 16 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் குற்றவாளிகளுக்கான மறுவாழ்வு மற்றும் சீர்திருத்த நிலையமாக செயல்படுகிறது. இங்கு ஆளுமை வளர்ச்சி, தொழிற்பயிற்சி மற்றும் சமூகத்தில் மீண்டும் இணைவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த மையம் தப்பியோட்ட சம்பவங்களால் அடிக்கடி செய்திகளில் இடம்பெற்று வருகிறது. குறிப்பாக 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பல இளைஞர்கள் கூரையின் வழியாக தப்பிச் சென்ற சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
இந்த புதிய தப்பியோட்டம், மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.





