கயிற்றுடன் சென்ற மலையேற்ற குழு விபத்தில் சிக்கியது… சுவிஸ் ஆல்ப்ஸ் பகுதியில் சோகம்!
கயிற்றுடன் சென்ற மலையேற்ற குழு விபத்தில் சிக்கியது... சுவிஸ் ஆல்ப்ஸ் பகுதியில் சோகம்!

கயிற்றுடன் சென்ற மலையேற்ற குழு விபத்தில் சிக்கியது… சுவிஸ் ஆல்ப்ஸ் பகுதியில் சோகம்!
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் அமைந்துள்ள ப்ளூம்லிசால்ப்ஹார்ன் Blüemlisalphornபகுதியில் ஏற்பட்ட பனிப்பிளவு விபத்தில், ஒரு மலையேறுபவர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை பிற்பகல், மலையிலிருந்து கீழிறங்கிக் கொண்டிருந்த இரண்டு மலையேறுபவர்கள் கொண்ட கயிறு குழு, எதிர்பாராத விதமாக பனிப்பிளவு ஒன்றில் விழுந்தது.

இந்த விபத்தில், வாட் மாகாணத்தைச் சேர்ந்த 49 வயதான சுவிஸ் நாட்டவர் ஒருவர் உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்றொரு நபர் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டார்.
சனிக்கிழமை காலை, அந்தப் பகுதியில் சென்ற மற்ற மலையேறுபவர்கள், பனிப்பிளவில் இருந்து ஒருவரின் உதவிக்குரலைக் கேட்டுள்ளனர். உடனடியாக அவர்கள் அவசர சேவைகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும், மீட்புக் குழுவினர் விரைந்து சென்று இருவரையும் மீட்டனர். ஆனால் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த மீட்பு நடவடிக்கையில் பெர்ன் மாகாண காவல்துறை குழுக்கள், ரெகா மீட்பு ஹெலிகாப்டர், சுவிஸ் ஹெலிகாப்டர் மற்றும் சுவிஸ் ஆல்பைன் மீட்பு நிபுணர்கள் ஈடுபட்டனர்.
தற்போது, இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
ஓபர்லாந்து பிராந்திய அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், விபத்தின் முழுமையான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை கண்டறியும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆல்ப்ஸ் மலையில் மலையேற்றம் மேற்கொள்பவர்கள், பனிப்பிளவு பகுதிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






