சுவிசில் சிறுநீரை பருகுமாறு பலவந்தப்படுத்திய நபருக்கு சிறை தண்டனை
சுவிட்சர்லாந்தில் தனது துணையை சிறுநீரை பரகுமாறு பலவந்தப்படுத்திய நபர் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாலியல் ரீதியாக துன்புறுத்தியதன் அடிப்படையில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
32 வயதான ஜெர்மனிய பிரஜை ஒருவருக்கு இவ்வாறு சுவிட்சர்லாந்தில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு சுவிட்சர்லாந்து நீதிமன்றம் 22 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் இரவு 10 மணிக்குமேல் நின்றுகொண்டே சிறுநீர் கழிப்பது குற்றமா.?
இந்த நபர் எதிர்வரும் ஆறு ஆண்டுகளுக்கு சுவிட்சர்லாந்துக்குள் பிரவேசிக்க முடியாது என்ற தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 19 வயதான யுவதி ஒருவரை கடுமையான பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தியதாக இந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

தனது சிறுநீரை அருந்துமாறு இந்த நபர் குறித்த யுவதியை பலவந்தப்படுத்தியுள்ளதாக நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த இந்த முறைப்பாடுகளை விசாரணை செய்த நீதிமன்றம் குறித்த நபருக்கு சிறை தண்டனை விதித்துள்ளது.
இந்த குற்றச்செயல்களுக்காக குறித்த யுதிக்கு பத்தாயிரம் சுவிஸ் பிராங்குகள் அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






