சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தை கண்டறிவதில் அமெரிக்காவை சார்ந்து இருக்கும் சுவிட்சர்லாந்து
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தை கண்டறிவதில் அமெரிக்காவை சார்ந்து இருக்கும் சுவிட்சர்லாந்து

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தை கண்டறிவதில் அமெரிக்காவை சார்ந்து இருக்கும் சுவிட்சர்லாந்து
இணையவழி சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களை கண்டறிவதில் சுவிட்சர்லாந்து அதிகமாக அமெரிக்க அமைப்புகளை சார்ந்து இருப்பது குறித்து புதிய கவலைகள் எழுந்துள்ளன.
ஜெர்மன் மொழிப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் குழந்தைகள் பராமரிப்பு பணியாளர் ஒருவர், குறைந்தது 15 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம், அமெரிக்காவில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் வெளிச்சத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Federal Office of Police வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவிலிருந்து இத்தகைய 16,750 தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இது இதுவரை பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.

இந்த நிலைமை, சுவிட்சர்லாந்து தனது குழந்தைகள் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகளை தன்னிச்சையாக செயல்படுத்தும் திறன் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக இணையத்தில் இடம்பெறும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை கண்டறிவதில் வெளிநாட்டு அமைப்புகள் மீது அதிக நம்பிக்கை வைக்கப்படுவதாக சட்ட நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனையடுத்து, நாட்டிற்குள் தனித்துவமான புகார் மற்றும் கண்காணிப்பு மையம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இல்லையெனில், சுவிட்சர்லாந்தில் நடைபெறும் துஷ்பிரயோகங்களை கண்டறியும் செயல்முறை வெளிநாடுகளில் எடுக்கப்படும் முடிவுகளின் மீதே பெருமளவில் சார்ந்திருக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சமீப ஆண்டுகளில் இணையவழி குழந்தைகள் பாதுகாப்பு பிரச்சினைகள் உலகளவில் அதிக கவனம் பெறும் நிலையில், சுவிட்சர்லாந்தும் தனது சட்ட மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக சமூக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
© WRS






