மேல்பெட்டியில் பொருள் வைத்தீர்களா? ஹாங்காங் விமான பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை
மேல்பெட்டியில் பொருள் வைத்தீர்களா? ஹாங்காங் விமான பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை

மேல்பெட்டியில் பொருள் வைத்தீர்களா? ஹாங்காங் விமான பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை…
சூரிச் மற்றும் ஹாங்காங் இடையே இயக்கப்படும் SWISS விமானங்களில் தொடர்ச்சியாக இடம்பெறும் திருட்டுச் சம்பவங்கள், பயணிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
சமீப மாதங்களில், இரவு நேர விமானப் பயணங்களின் போது பயணிகள் உறங்கிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மேல்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பணம், நகை, மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட விலைமதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள SWISS விமான நிறுவனம், உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்போது சூரிச்–ஹாங்காங் விமானங்களில், பயணிகள் தங்கள் மதிப்புமிக்க பொருட்களை மேல்பெட்டிகளில் வைக்காமல், எப்போதும் தங்களுடனேயே வைத்திருக்க வேண்டும் என்ற சிறப்பு அறிவிப்பு ஒலிபரப்பப்படுகிறது.

மேலும், விமானப் பணியாளர்களுக்கும் கூடுதல் பாதுகாப்புப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை உடனடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய அளவில் விமானங்களில் நடைபெறும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், சில விமான நிறுவனங்கள் இரகசிய பாதுகாப்பு அதிகாரிகளையும் நியமிக்கத் தொடங்கியுள்ளன.
எனவே, நீங்கள் ஹாங்காங் அல்லது நீண்ட தூர விமானப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால், உங்கள் பாஸ்போர்ட், பணம், நகை, மொபைல் போன் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை எப்போதும் உங்கள் கைப்பையில் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.





