சூரிச்சில் வலதுகுறைந்தோர் இல்லத்தில் தீவிபத்து – இருவர் உடல் கருகி பலி..!
சூரிச்சில் வலதுகுறைந்தோர் இல்லத்தில் தீவிபத்து – இருவர் உடல் கருகி பலி..! நேற்று புதன்கிழமை மாலை (ஜனவரி 3, 2024) சூரிச் கன்டோன் உஸ்டரில் உள்ள ஒரு சமூக நிறுவனத்தில் (வலதுகுறைந்தோர்) ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு 9:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். குறித்த நிறுவனத்தின் அறிவாற்றல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கான பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

Bildquelle: Kantonspolizei Zürich / BRK News
போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சேவை பிரிவினர், குடியிருப்பு பகுதியில் தீ பரவியதை கண்டறிந்து தீயை உடனடியாக அணைத்தனர்.

Bildquelle: Kantonspolizei Zürich / BRK News
கட்டிடத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்று குடியிருப்பாளர்கள் உட்பட ஒரு பெண் குடியிருப்பாளர் மற்றும் ஒரு பராமரிப்பாளர், நச்சுத்தன்மையுடைய புகையை சுவாசித்தமையினால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Bildquelle: Kantonspolizei Zürich / BRK News
31 வயதுடைய குடியிருப்பாளரும், 34 வயதுடைய குடியிருப்பாளரும் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கட்டிடம் வாழத்தகுதியற்றதாக இருப்பதாகவும், ஆரம்ப மதிப்பீடுகளின்படி, பொருள் சேதம் பல இலட்சம் பிராங்குகள் இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

Bildquelle: Kantonspolizei Zürich / BRK News
தீ விபத்துக்கான சரியான காரணம் தற்போது தெரியவில்லை. சூரிச் தடயவியல் நிறுவனம் மற்றும் அரசு வழக்கறிஞர் அலுவலகத்துடன் இணைந்து கன்டோனல் காவல்துறையின் தீயணைப்பு விசாரணை சேவையின் நிபுணர்களால் இது தொடர்பாக விசாரிக்கப்பட்டுவருகின்றது.






