Swiss News In Tamil

வின்டர்தூரில் கட்டிட அடித்தளத்தில் தீ விபத்து – மூவர் லேசாக காயம்

வின்டர்தூரில் கட்டிட அடித்தளத்தில் தீ விபத்து – மூவர் லேசாக காயம்

சுவிட்சர்லாந்தின் Winterthur நகரில் பிரதான தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள கட்டிடமொன்றின் அடித்தளத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூவர் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

Stadtpolizei Winterthur வெளியிட்ட தகவலின்படி, தற்போது பயன்படுத்தப்படாமல் இருந்த அந்த கட்டிடத்தில் புதுப்பிப்பு மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.

காலை 10 மணிக்குப் பின்னர் தீ விபத்து குறித்த தகவல் Schutz & Intervention Winterthur தீயணைப்பு பிரிவுக்கு கிடைத்ததைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் Winterthur நகர காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அங்கு கட்டிடத்தின் அடித்தளத்தில் தீ பரவி கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. அந்த நேரத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த மூவர் லேசாக காயமடைந்தனர். அவர்களுக்கு அவசர மருத்துவ உதவி வழங்கப்பட்டதுடன், ஒருவரை மேலதிக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

n8b

தீயணைப்பு பிரிவினர் தீயை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அடர்ந்த புகை காரணமாக மீட்பு நடவடிக்கைகள் சிரமமானதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து Paulstrasse சுற்றுவட்டாரத்தில் பல சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

இந்த தீ விபத்து கட்டுமான பணிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என ஆரம்ப சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. தீ விபத்திற்கான சரியான காரணம் மற்றும் ஏற்பட்ட சொத்து சேதம் குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button