Swiss News In Tamil

வின்டர்தூரில் நாய் கடித்து பெண் காயம் – நாயுடன் இருந்த நபர் தப்பிச் சென்றார்

வின்டர்தூரில் நாய் கடித்து பெண் காயம் – நாயுடன் இருந்த நபர் தப்பிச் சென்றார்

வின்டர்தூரில் நாய் கடித்து பெண் காயம் – நாயுடன் இருந்த நபர் தப்பிச் சென்றார்

வின்டர்தூர் (Winterthur) நகரில் நாய் கடித்ததில் பெண் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்திற்குப் பின்னர் நாயுடன் இருந்த நபர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 8.15 மணியளவில் Tösstalstrasse பகுதியில் இடம்பெற்றதாக Stadtpolizei Winterthur தெரிவித்துள்ளது.

அவசர அழைப்பு மையத்திற்கு நாய் கடியால் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, வின்டர்தூர் நகர போலீசாரும் மீட்புப் பிரிவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அங்கு காயமடைந்த பெண்ணுக்கு முதற்கட்ட சிகிச்சை வழங்கப்பட்டதுடன், பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, Tösstalstrasse 287 அருகிலுள்ள நடைபாதையில் சென்றுகொண்டிருந்த போது குறித்த பெண்ணை நாய் கடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

N9

சம்பவத்திற்குப் பின்னர், நாயுடன் இருந்த அடையாளம் தெரியாத நபர் காயமடைந்த பெண்ணுக்கு உதவாமல் அங்கிருந்து சென்றுவிட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் சரியான சூழ்நிலைகள் குறித்து Stadtpolizei Winterthur மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button