Swiss News In Tamil

குடும்ப தகராரினால் சூரிச் மாகாணத்தில் இருவர் பலி.!!

வெள்ளிக்கிழமை இரவு ஒரு குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டதாக காவல் துறையினருக்கு இரவு 9 மணியளவில் எச்சரிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் கூற்றுப்படி டயமன்ட் சிறப்புப் பிரிவு நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இச்சம்பவம் ஆபத்தான சூழ்நிலைக்கு சென்ற போதும் போலீசார் ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சூரிச் கன்டோனல் பொலிஸின் கூற்றுப்படி, எல்சாவில் நேற்றைய சம்பவத்தின் போது ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று முதல் கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

Zwei Tote nach Familienstreit in Elsau ZH
(Bild: brk-news)

57 வயதான ஒருவர் தனது 54 வயது துணையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். அந்த நபர் 36 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரையும் பலத்த காயப்படுத்தியுள்ளார். 57 வயதான அவர் தன்னைத்தானே பலத்த காயங்களுக்கு உள்ளாக்கியுள்ளதோடு, அதிலிருந்து அவர் அவசர மருத்துவ சிகிச்சைக்கா போது ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது உயிரிழந்துள்ளார்.

36 வயதான மற்ரறைய நபர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். துப்பாக்கிச் சூடு எதற்காக நடத்தப்பட்டது என்பது குறித்து இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. மேலதிக விசாரணைகள் சூரிச் கன்டோனல் காவல்துறை மற்றும் சூரிச் மாகாணத்தின் பொது வழக்கறிஞர் அலுவலகம் , ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button