Swiss News In Tamil

ஆர்காவ் கன்டோனில் கவனக்குறைவால் ரயில் மற்றும் கார் இடையே விபத்து

ஆர்காவ் கன்டோனில் கவனக்குறைவால் ரயில் மற்றும் கார் இடையே விபத்து

சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் கன்டோன் டெயூபென்தால் (Teufenthal) ரயில்நிலையம் அருகே 2025 ஜூலை 1 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில், ஒரு கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

61 வயதுடைய ஒரு பெண் டிரைவர், தனது வோல்வோ (Volvo) காரை டெயூபென்தால் ரயில்நிலையத்தைத் தாண்டி வின்னெந்தால் சாலையில் (Wynentalstrasse) செலுத்த முயன்ற போது, அந்த இடத்தில் ஏற்கனவே எரிந்துகொண்டிருந்த சிவப்பு எச்சரிக்கை விளக்கை (red blinking light) புறக்கணித்து பயணித்துள்ளார்.

அதே நேரத்தில், உண்டர்குலம் (Unterkulm) பகுதியில் இருந்து வந்த வின்னெந்தால்/சுரெந்தால் ரயில்வே (WSB) ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. டிரைவர் ரயில் வரும் நேரத்தில் ரயில் பாதையை கடக்க முயன்றதால், ரயில் காருடன் நேரடியாக மோதியது.

ஆர்காவ் கன்டோன்

அதிர்ஷ்டவசமாக, அந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. ஆனால் காருக்கு முற்றிலும் சேதம் ஏற்பட்டது (Totalschaden) என்றும், ரயிலின் முன்பகுதி (Triebwagen) பாதிக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் சாலை பாதுகாப்புக்கான முக்கியத்துவத்தை நினைவுபடுத்துகிறது. ரயில்வே கடவையிடங்களில் எச்சரிக்கை விளக்குகள் ஒளிரும்போது அவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

@Kantonspolizei Aargau

Related Articles

Back to top button