அப்பன்செல்லில் (Appenzeller) கொள்ளை முயற்சி: சாட்சிகளை தேடும் போலீசார்
அப்பன்செல்லில் கொள்ளை முயற்சி: சாட்சிகளை தேடும் போலீசார் .!! நவம்பர் 29, 2024 வெள்ளிக்கிழமை அதிகாலை, அப்பென்செல்லில் 18 வயது பெண் ஒருவர் மீது கொள்ளை முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. காலை 6:20 மணியளவில் Böhleli பகுதியில் இளம் பெண் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் நடந்து சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
#### வழிப்போக்கர் மீது குற்றவாளி தாக்குதல்
அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்தப் பெண்ணின் பின்னால் வந்து அவரது பையை பறிக்க முயன்றார். அதே நேரத்தில், அவர் சத்தமாக பணம் தருமாறு கோரினார். பாதிக்கப்பட்டவர் விரைவாக உதவிக்காக சத்தமாக கத்தத் தொடங்கினார்.

#### கொள்ளையடிக்காமல் தப்பி ஓடிவிட்டார்
பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்ட அருகில் இருந்த குடியிருப்பாளர் ஒருவர் இதனை அவதானித்தவுடன், குற்றவாளி கொள்ளையடிக்காமல் தெரியாத திசையில் தப்பிச் சென்றதாகத் தெரிகிறது. சம்பவம் நடந்த உடனேயே போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டாலும் இதுவரை குற்றவாளியை பிடிக்க முடியவில்லை.
குற்றவாளி பற்றி தகவல் தெரிந்தாலோ அல்லது குறிப்பிட்ட சம்பவத்தை நேரில் பார்த்திருந்தாலோ தெரிவிக்குமாறு உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தருமாறும் போலீசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுபோன்ற சூழ்நிலைகளில் விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான எதையும் நீங்கள் கண்டால் உடனடியாக 117 க்கு அழைக்குமாறும் காவல்துறை உங்களை கேட்டுக்கொள்கிறது.
–
(c) kantonspolizei-appenzell-innerrhoden





