Swiss News In Tamil

பள்ளிக்கு மிரட்டல் விடுத்த மாணவன் : போலீசாரிடம் சொன்ன செய்தி..!!!

பள்ளிக்கு மிரட்டல் விடுத்த மாணவன் : போலீசாரிடம் சொன்ன செய்தி..!!! நவம்பர் 28, 2024 வியாழன் காலை, துர்காவ் மாகாணத்தில் உள்ள Wangi (வாங்கியில்) உள்ள ஒரு பள்ளியில் பள்ளிக் கழிவறையில் அச்சுறுத்தும் செய்தி கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து துர்காவ் கன்டோனல் போலீசார் காலை 10:20 மணியளவில் விரைந்து விசாரணையை தொடங்கினர்.

#### விசாரணை மற்றும் வாக்குமூலம்

உடனடியாக கன்டோனல் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். சிறிது நேரம் கழித்து, ஒரு தாய் தனது மகனுடன் பள்ளிக்கு வந்துள்ளார், மேலும் அந்த மாணவர் மிரட்டல் செய்தியை தான்தான் எழுதியதாக ஒப்புக்கொண்டார். இதுபோன்ற சம்பவங்கள் குறித்து ஊடகங்களில் கேள்விப்பட்டதாகவும், அது வெறும் ஒரு நகச்சுவைக்காக எழுதியதாகவும் குறித்த மாணவன் போலீசாரிடம் தெரிவித்தான்.

மாணவன் விளக்கம் அளித்த போதிலும், சம்பவம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இளம் வழக்கறிஞர் அலுவலகம் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது, ஏனெனில் அச்சுறுத்தல்கள் கடுமையான சட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இது தொடர்பில் சட்டநடிவக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

#### காவல்துறை விளக்கம்

இதுபோன்ற அச்சுறுத்தும் செய்திகளின் தீவிரம் மற்றும் சாத்தியமான சட்டரீதியான விளைவுகள் குறித்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தெரிவிக்குமாறு துர்காவ் கன்டன் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இத்தகைய அச்சுறுத்தல்கள் “நகைச்சுவையாக” கருதப்பட்டாலும், அவை கடுமையான கிரிமினல் குற்றங்களாகக் கருதப்படலாம் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் நிலையான நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: துர்காவ் கன்டோனல் போலீஸ்

Related Articles

Back to top button