Swiss News In Tamil

சூரிச் வந்து கொண்டிருந்த யூரோசிட்டி ரயில் மரத்தில் சிக்கியது

சூரிச் வந்து கொண்டிருந்த யூரோசிட்டி ரயில் மரத்தில் சிக்கியது

சூரிச் நோக்கி வந்து கொண்டிருந்த யூரோசிட்டி ரயில் ஜேர்மனியில் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சுமார் 300 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த ரயில், Baden-Württemberg இற்கு தென்கிழக்கே, மரத்தில் மோதியுள்ளது.

இந்த விபத்தில் பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

சூரிச்

இதையடுத்து சுவிஸ் ரயில்வேயின் மீட்பு பிரிவு விரைந்து சென்று மரத்தை அகற்றி ரயில் தொடர்ந்து பயணிக்க வழியமைத்தது.

இதனால் 1 மணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.

மூலம்- 20min

Related Articles

Back to top button