Swiss News In Tamil

சுவிஸில் போதைப் பொருள் வலையமைப்பைச் சேர்ந்த 20 பேர் கைது

சுவிஸில் போதைப் பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ் கான்டனைச் சேர்ந்த அதிகாரிகள் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

சுவிஸில், போதைப் பொருள், வலையமைப்பை, கைது

ஆர்கெவ் மற்றும் சொலொத்ரோன் ஆகிய கான்டன்களில் இந்த கும்பல் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய ஹங்கேரி மற்றும் குரேஷிய பிரஜைகள் இருவருக்கு எதிராக அண்மையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சுவிஸில், போதைப் பொருள், வலையமைப்பை, கைது

இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பெருமளவான போதைப் பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நீதிமன்றில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button