பாலஸ்தீன் ஆதரவு ஆர்ப்பாட்டத்திற்கு நடத்திய அமைப்பினருக்கு வந்த சிக்கல்
பாலஸ்தீன் ஆதரவு ஆர்ப்பாட்டத்திற்கு நடத்திய அமைப்பினருக்கு வந்த சிக்கல்
நவம்பர் 1ஆம் தேதி சியோன் நகரில் அனுமதி இன்றி நடைபெற்ற பாலஸ்தீன் ஆதரவு ஆர்ப்பாட்டத்துக்காக, அந்த நிகழ்வின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான செலவுகளை ஏற்பாட்டாளர்களிடம் வசூலிக்க சுவிட்சர்லாந்தின் வாலே கன்டோன் அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் தீர்மானத்தை மாநில கவுன்சிலர் ஸ்டீபன் கான்சர், பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினார்.
நகரமும் பின்னர் மாநிலமும் விதித்த தடை இருந்தபோதிலும், ‘Valais Palestine’ கூட்டமைப்பு அனைத்து சவால்களையும் மீறி ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தது. காவல்துறையின் தகவலின்படி, மதியம் நடைபெற்ற இந்த நிகழ்வில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். எந்த காயமும், சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், பெருகிய மக்கள் வருகையை முன்னிட்டு, வாலே மாநில காவல்துறை, மத்திய நகரங்களின் பிராந்திய காவல்துறைக்கு உதவியாக கூடுதல் படைகளை அனுப்பியது. மாலை 4.45 மணியளவில், ரயில் நிலையப் பகுதியில் ஒரு தடுப்பைப் பலவந்தமாக உடைத்து நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேறியதாக கூறப்பட்டது. ஆனால் சுமார் 50 மீட்டர்கள் கழித்தே மாநில காவல்துறை அவர்களை நிறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

இத்துடன், 34 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் இருந்த சில ஆபத்தான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், எட்டு பேருக்கு குறிப்பிட்ட பகுதிகளில் நுழையத் தடை விதிக்கப்பட்டது. நான்கு பேருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக ஸ்டீபன் கான்சர் தெரிவித்தார்.
சியோனில் நடைபெறும் பொதுக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி பெறுவது கட்டாயமாகும். சமீபகாலங்களில் ஐரோப்பாவில் பாலஸ்தீன் தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்திருப்பதாலும், பாதுகாப்பு கவலைகள் காரணமாக சுவிட்சர்லாந்தின் பல நகரங்களில் அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர்.
© RTS





