கிளாருஸ் கன்டோனில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் வெளியான தகவல்.!!
கிளாருஸ் கன்டோனில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் வெளியான தகவல்.!! கன்டோன் கிளாருசில் உள்ள ஷ்வாண்டன் பகுதியில் அண்மையில் பாரிய நிலச்சரிவு ஒன்று இடம்பெற்றிருந்தது.
குறித்த சம்பவத்தினால் பல வீடுகள் சேதமைடந்தும், மண்ணுக்குள் புதையுண்டும் போனது. இதனால் குடியிருப்பாளர்கள் பலர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு இறுதி வரை அவர்களால் சொந்த வீடுகளுக்கு திரும்ப முடியாமல் போகலாம் என்று தலைமைப் பணியாளர் ஹான்ஸ்பீட்டர் ஸ்பீச் இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும், அவர் அது பற்றி தெரிவிக்கையில், குடியிருப்பாளர்கள் எப்போது திரும்ப செல்லலாம் என்பதை சரியாக கூறமுடியாது, முடியுமானவரை நிலமைகள் சீர்செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது.
அதிகாரிகள் அதற்கான வேலைகளை விரைவாக முன்னெடுத்து வருகின்றனர் என குறிப்பிட்டார். சனிக்கிழமையன்று காலி செய்ய மறுத்த ஐந்து பேர் தற்போது அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.
வெளியேற்றப்பட்டவர்களுக்கு நிலைமை எளிதானது அல்ல, குறிப்பாக இப்போது விடுமுறை நாட்கள் என்பதால், அவர்கள் நிச்சயமாக பதட்டமாக இருந்தனர். ஆனால் அவர்கள் நிலமைகளை புரிந்துகொண்டார்கள் எனவும் ஹான்ஸ்பீட்டர் ஸ்பீச் மேலும் தெரிவித்தார்.





