சுவிட்சர்லாந்தில் அரசின் மானியச் செலவுகள் 50 பில்லியன் பிராங்கை தாண்டியது
சுவிட்சர்லாந்தில் அரசின் மானியச் செலவுகள் 50 பில்லியன் பிராங்கை தாண்டியது

சுவிட்சர்லாந்தில் அரசின் மானியச் செலவுகள் 50 பில்லியன் பிராங்கை தாண்டியது
சுவிட்சர்லாந்து அரசாங்கம் பல்வேறு துறைகளுக்காக வழங்கும் நிதி உதவிகள் மற்றும் மானியங்களின் மொத்த மதிப்பு 2025 ஆம் ஆண்டில் 50 பில்லியன் பிராங்கைத் தாண்டியுள்ளதாக சுவிட்சர்லாந்து மத்திய புள்ளிவிவர அலுவலகம் (BFS) வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
அந்த அறிக்கையின்படி, கூட்டாட்சி அரசின் நிதி உதவிகளை நாடு முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் பயனாளர்கள் பெற்றுள்ளனர். சமூக நலத்துறை அரசின் செலவினங்களில் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது.
முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் மற்றும் பிற சமூக பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்ட சமூக நலத்துறைக்காக மட்டும் 2025 ஆம் ஆண்டில் 50.6 பில்லியன் பிராங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது அரசின் நிதிச் செலவினங்களில் மிகப்பெரிய பகுதியாகும்.
அடுத்ததாக போக்குவரத்துத் துறைக்காக 8.3 பில்லியன் பிராங்குகளும், கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைக்காக 8.2 பில்லியன் பிராங்குகளும் செலவிடப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் எதிர்கால திறன் மேம்பாட்டில் இந்த இரண்டு துறைகளும் முக்கிய பங்கு வகிப்பதாக கருதப்படுகின்றன
.
இதனைத் தொடர்ந்து விவசாயத் துறைக்கு 3.6 பில்லியன் பிராங்குகள், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு 2.3 பில்லியன் பிராங்குகள், பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு 1.9 பில்லியன் பிராங்குகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேவேளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கலாசாரம், பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான கூட்டாட்சி நிதி பங்களிப்புகள் ஒவ்வொன்றும் 1 பில்லியன் பிராங்கிற்குக் குறைவாகவே பதிவாகியுள்ளன.
சுவிட்சர்லாந்து உலகின் வலுவான சமூக பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றைக் கொண்ட நாடாகக் கருதப்படுகிறது. அதனால் ஓய்வூதியம் மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். வெளியிடப்பட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள், சுவிஸ் வரிப்பணத்தின் பெரும்பகுதி சமூக பாதுகாப்பு மற்றும் பொதுச் சேவைகளைத் தாங்குவதற்காக பயன்படுத்தப்படுவதை வெளிப்படுத்துகின்றன.





