Local Swiss News

எந்தத் தூண்டுதலும் இல்லை… நடந்து சென்றவரை தாக்கிய மர்ம கும்பல்! சாட்சிகளைத் தேடும் காவல்துறை

எந்தத் தூண்டுதலும் இல்லை... நடந்து சென்றவரை தாக்கிய மர்ம கும்பல்! சாட்சிகளைத் தேடும் காவல்துறை

எந்தத் தூண்டுதலும் இல்லை… நடந்து சென்றவரை தாக்கிய மர்ம கும்பல்! சாட்சிகளைத் தேடும் காவல்துறை…

சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் நள்ளிரவில் நடந்த மர்மத் தாக்குதல் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடு திரும்பிக் கொண்டிருந்த 40 வயது சுவிஸ் நபர் ஒருவர், எந்தவிதத் தூண்டுதலும் இல்லாமல் அடையாளம் தெரியாத இளைஞர்கள் குழுவால் தாக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு கேளிக்கை நிகழ்ச்சியை முடித்துவிட்டு, தனது மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு எர்லின்ஸ்பாக் நோக்கி நடந்து சென்ற அவர், ஆற்றங்கரையோரப் பாதையில் இசை கேட்டுக்கொண்டிருந்த இளைஞர்கள் குழுவை பார்த்துள்ளார். அந்தக் குழுவில் ஒருவர் சிவப்பு நிற ஸ்வெட்டர் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

26j 3

திடீரென, அவரின் முகத்தில் பலமாக குத்தப்பட்டதாகவும், அதன் பிறகு நடந்த எதுவும் தனக்கு நினைவில் இல்லை என்றும் பாதிக்கப்பட்டவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவத்திற்குப் பிறகு அவரது தலையில் காயங்களும் சிராய்ப்புகளும் காணப்பட்டன. அவர் சில நேரம் சுயநினைவின்றி இருந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்தத் தாக்குதல் இரவு 11 மணி 45 நிமிடத்துக்கும், நள்ளிரவு 12 மணி 15 நிமிடத்துக்கும் இடையில் நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அதிகாலை 2 மணியளவில், அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் காயமடைந்த அந்த நபர் உதவி கேட்டதாக ஒரு பெண் அவசர அழைப்பு விடுத்திருந்தாலும், அப்போது காவல்துறையினர் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

தற்போது, தாக்குதல் நடத்தியவர்கள் யார், அதன் பின்னணி என்ன என்பது இன்னும் தெரியவில்லை. இந்த வழக்கை விசாரித்து வரும் ஆர்காவ் மாகாண காவல்துறையினர், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button