Swiss News In Tamil

குடியேற்றம் குறைந்தால் சுவிஸ் ஓய்வூதிய நிதிக்கு அழுத்தம் அதிகரிக்கும்: பொருளாதார நிபுணர் எச்சரிக்கை

குடியேற்றம் குறைந்தால் சுவிஸ் ஓய்வூதிய நிதிக்கு அழுத்தம் அதிகரிக்கும்: பொருளாதார நிபுணர் எச்சரிக்கை

குடியேற்றம் குறைந்தால் சுவிஸ் ஓய்வூதிய நிதிக்கு அழுத்தம் அதிகரிக்கும்: பொருளாதார நிபுணர் எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டால், நாட்டின் அரச ஓய்வூதிய நிதியான AHV/AVS மீது எதிர்காலத்தில் கடுமையான அழுத்தம் உருவாகலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சென்ட்கேலன் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியரான ரெட்டோ ஃபெல்ல்மி (Reto Föllmi) கூறுகையில், “குடியேற்றம் என்பது அரச ஓய்வூதிய அமைப்புக்கான ஒரு இளமை ஊற்று போன்றது” என தெரிவித்துள்ளார்.

அவரின் விளக்கப்படி, தற்போது சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்து வரும் பலரும் 20 முதல் 45 வயதுக்குள் உள்ளவர்கள். வேலைவாய்ப்பில் செயலில் இருக்கும் இந்த வயதுக்குட்பட்ட மக்கள் செலுத்தும் சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய பங்களிப்புகளே, தற்போது ஓய்வு பெறும் baby boomer தலைமுறைக்கான நிதி சுமையை சமநிலைப்படுத்த உதவுகின்றன.

N6a 1

குறிப்பாக, சுவிட்சர்லாந்தில் அதிகமானோர் ஓய்வு வயதை அடைந்து வரும் இந்த காலகட்டத்தில், வேலை செய்பவர்களின் பங்களிப்புகள் AHV/AVS நிதிக்குப் பெரும் ஆதாரமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“குடியேற்றம் கணிசமாக குறைந்துவிட்டால், அரச ஓய்வூதிய அமைப்பு மிகவும் விரைவாக நிதி அழுத்தத்திற்கு உள்ளாகும். ஏனெனில், வருவாய் உடனடியாக குறையத் தொடங்கும்,” என்றும் ரெட்டோ ஃபெல்ல்மி எச்சரித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் குடியேற்றம் தொடர்பான அரசியல் விவாதங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் நிலையில், பொருளாதாரம், வேலைவாய்ப்பு சந்தை மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்புகள் மீது அதன் தாக்கம் குறித்து நிபுணர்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button