சுவிட்சர்லாந்தை தாக்கிய கடும் புயல் – ஒரே நாளில் 7,500க்கு நெருங்கிய மின்னல் தாக்கங்கள் பதிவு
சுவிட்சர்லாந்தை தாக்கிய கடும் புயல் – ஒரே நாளில் 7,500க்கு நெருங்கிய மின்னல் தாக்கங்கள் பதிவு
சுவிட்சர்லாந்தை தாக்கிய கடும் புயல் – ஒரே நாளில் 7,500க்கு நெருங்கிய மின்னல் தாக்கங்கள் பதிவு
சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் இன்று கடும் இடியுடன் கூடிய மழை மற்றும் புயல் நிலை ஏற்பட்ட நிலையில், நாடு முழுவதும் சுமார் 7,500 மின்னல் தாக்கங்கள் பதிவாகியுள்ளதாக சுவிட்சர்லாந்து வானிலை மற்றும் காலநிலை ஆய்வு மையமான MeteoSwiss தெரிவித்துள்ளது.
பல பகுதிகளில் பலத்த காற்று, கனமழை மற்றும் இடியுடன் கூடிய மின்னல் தாக்கங்கள் ஏற்பட்டதால் அவசர சேவைகள் பல இடங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அதிகபட்சமாக மணிக்கு 114 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்னல் தாக்கங்கள் அதிகமாக பதிவான கன்டோனாக பேர்ன் (Bern) இருந்துள்ளது. அங்கு மட்டும் 1,321 மின்னல் தாக்கங்கள் பதிவாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து சென்ட்கேலன் (St. Gallen) கன்டோனில் 699 மற்றும் லூசேர்ன் (Luzern) கன்டோனில் 666 மின்னல் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
மாறாக, மிகக் குறைவான மின்னல் தாக்கங்கள் ஷாப்ஹௌசன் (Schaffhausen) கன்டோனில் பதிவாகியுள்ளன. அங்கு வெறும் 13 மின்னல் தாக்கங்களே ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Radio Munot
டிசினோ கன்டோனிலும் கடும் மழை பெய்துள்ளது. குறிப்பாக ஸ்டாபியோ (Stabio) பகுதியில் 76.4 மில்லிமீட்டர் மழைப்பதிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் நீர் தேக்கம் மற்றும் போக்குவரத்து சிரமங்களும் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், பேர்ன் கன்டோனில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பேர்ன் மற்றும் துண் (Thun) இடையிலான ரயில் பாதையில் மரம் ஒன்று விழுந்ததால், பல S-Bahn ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன் தாமதங்களும் ஏற்பட்டன.
சுவிட்சர்லாந்தின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் மேலும் இடியுடன் கூடிய மழை தொடரக்கூடும் என வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மக்கள் தேவையற்ற வெளிப்புற பயணங்களை தவிர்க்கவும், வானிலை எச்சரிக்கைகளை கவனமாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





