Swiss News In Tamil

லூசெர்ன் கன்டோனில் 50-க்கும் அதிகமான திருட்டு புகார்கள்: போலீஸ் அதிக எச்சரிக்கை

லூசெர்ன் கன்டோனில் 50-க்கும் அதிகமான திருட்டு புகார்கள்: போலீஸ் அதிக எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக லூசெர்ன் கன்டோனின் பல பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட வீட்டுத் திருட்டு சம்பவங்கள் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக குடியிருப்புகள் மற்றும் தனித் தனி வீடுகள் அதிகமாக இலக்காகியுள்ளன. இதனால், பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று லூசெர்ன் போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. சந்தேகத்துக்கிடமான எந்த நிகழ்வையும் உடனடியாக 117 அவசர எண்ணில் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

போலீசார் கூறுகையில், குடியிருப்பு பகுதிகளில் அறிமுகமற்ற நபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிவதும், மெதுவாக அல்லது தேடுபோக்கில் அங்கங்கு செல்வது போல் தெரியகூடிய வெளிநாட்டு வாகனங்கள் காணப்பட்டாலும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். கண்ணாடி உடைதல், மரம் சிதறுவது போன்ற இயல்பற்ற சத்தங்களையும் கவனத்தில் கொண்டு போலீசுக்கு தெரிவித்தால் விசாரணைக்கு உதவியாக இருக்கும். சம்பவம் குறித்த தெளிவான விவரங்கள் வழங்கப்படின், குற்றவாளிகளைத் தேடும் பணியில் அது முக்கிய பங்காற்றும்.

N5 2

வீடு பாதுகாப்புக்காக போலீசார் சில முக்கிய ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர். வீடைவிட்டு வெளியேறும் போது கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உறுதியாக பூட்டப்பட்டுள்ளனவா என்று பரிசோதிக்க வேண்டும். நீண்ட நாட்கள் வீட்டில் இல்லாத சூழ்நிலையில் நம்பகமான அயல்வாசிகளுக்கு அதை முன்கூட்டியே தெரிவிப்பதும் அவசியம். மேலும், சமூக ஊடகங்களில் தாங்கள் வீட்டில் இல்லாததை வெளிப்படுத்தும் தகவல்கள் அல்லது படங்களைப் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.

லூசெர்ன் போலீஸ் தனிப்பட்ட பாதுகாப்பு ஆலோசனைகளையும் வழங்குகிறது. திருட்டு தடுப்பு தொடர்பான கூடுதல் தகவல்கள் போலீசின் இணையதளம் மற்றும் சுவிட்சர்லாந்தின் பாதுகாப்பு வழிகாட்டி தளங்களில் கிடைக்கின்றன.

© Kapo Lu

Related Articles

Back to top button