Swiss News In Tamil

ஜெனீவாவில் G7 உச்சி மாநாட்டை முன்னிட்டு போராட்டத் தடை விவாதம் தீவிரம்

ஜெனீவாவில் G7 மாநாடு: போராட்டத் தடை குறித்து சர்ச்சை

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா (Geneva) கன்டோனில் நடைபெறவுள்ள G7 உச்சி மாநாட்டை முன்னிட்டு, போராட்டங்களை தற்காலிகமாகத் தடை செய்யும் முன்மொழிவுகள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

வலதுசாரி பெரும்பான்மை கொண்ட பாராளுமன்றம், ஜூன் 11 முதல் 19 வரை போராட்டங்களைத் தடை செய்யும் தீர்மானத்தை அவசரமாக நிறைவேற்றியது. மேலும், சிலர் ஜூன் 10 முதல் 22 வரை “பாதுகாப்பு இடைவேளை” அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நடவடிக்கைகள் மாநாட்டின் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே என தெரிவிக்கப்படுகிறது.

N10 2

அதே நேரத்தில், அனுமதி இல்லாத போராட்டங்களை உடனடியாக கலைக்கவும், வணிக நிறுவனங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கவும் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. போராட்ட உரிமை அரசியலமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்படுவதால், முழுமையான தடை அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மாநில அமைச்சர் கரோல்-அன் காஸ்ட், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நிபுணர்கள் பணியாற்றி வருவதால் அவர்களை நம்ப வேண்டும் என தெரிவித்துள்ளார். போராட்ட அனுமதி தொடர்பான இறுதி முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை.

Related Articles

Back to top button