Swiss News In Tamil

பாசல் நகரில் நகை கடை கொள்ளை : கடை முற்றிலும் சேதம்

பாசல் நகரில் நகை கடை கொள்ளை : கடை முற்றிலும் சேதம்

பாசல் நகரத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு நகை கடையில் கொள்ளையடிப்புத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கடை உரிமையாளர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.. இந்த சம்பவம் நடந்தே சில மணி நேரங்களுக்கு பிறகு, கடை உரிமையாளர் சுவான்சிக் மினுட்டன் (20 Minuten) பத்திரிகைக்கு நிகழ்வை விவரித்தார்.

கொள்ளையர்கள் தங்க நகைகள் 1,83,916 சுவிஸ் பிராங்க் மதிப்பில், வெள்ளி நகைகள் 32,772 பிராங்க் மதிப்பில் திருடியுள்ளனர். ஆனால், கொள்ளையர்கள் பணப்பை அல்லது பணம் வைக்கும் லாக்கரை கொள்ளையடிக்கவில்லை.

நான்கு கொள்ளையர்கள் கடையை முற்றிலும் சேதப்படுத்தியுள்ளனர். கடை உரிமையாளர், “நான் முழு நாளையும் தூய்மை செய்யவும் கழித்தேன்” என்று தெரிவித்தார். கொள்ளையர்கள் கடையின் முன் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

N8 1

CCTV காணொளியில், முகம் மறைக்கப்பட்ட கொள்ளையர்கள் பெரிய பைகள் நகைகளால் நிரப்பி வெளியில் நிறுத்தப்பட்ட வெளிநாட்டு நம்பர் Plate கொண்ட கார்கள் மீது ஏற்றியதை தெளிவாக காணலாம்.

கடை உரிமையாளர் கூறுவதன்படி, கடையில் எச்சரிக்கை அமைப்பு இருந்ததால், போலீசாருக்கு உடனடியாக தகவல் சென்றது. அதே நேரத்தில், கடையிலிருந்து சில தூரங்ககளில் ஒரு போலீஸ் நிலையம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கொள்ளையர்கள் போலீசார் அந்த இடத்திற்கு செல்வதற்கு முன்னர் ஓடி சென்றுள்ளனர். உரிமையாளர், “நினைத்து தான் அச்சத்தில் இருப்பதாகவும் கொள்ளையர்கள் திரும்பி வரப்போவதில்லை எனவும் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.. திருடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி காப்பீடு செய்யப்பட்டிருந்ததால், பொருளாதார பாதிப்பு மிக குறைவாக இருக்கும் என அவர் நம்புகிறார்.

© Kap BL

Related Articles

Back to top button