பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இஸ்லாமிய அறிஞர் மீது நீதிமன்றம் இறுதி தீர்ப்பு
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இஸ்லாமிய அறிஞர் மீது நீதிமன்றம் இறுதி தீர்ப்பு
ஜெனீவாவைச் சேர்ந்த இஸ்லாமிய கல்வியாளர் தாரிக் ரமதான் மீது விதிக்கப்பட்ட பாலியல் வன்முறை குற்றச்சாட்டில் வழங்கப்பட்ட தண்டனையை சுவிஸ் கூட்டாட்சி நீதிமன்றம் (Federal Court) உறுதிப்படுத்தியுள்ளது.
ரமதான், ஜெனீவா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர், அங்கு கற்பித்ததோடு, பின்னர் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றியவர். அவர் முன்வைத்த மேல்முறையீட்டில், “ஜெனீவா நீதிமன்றம் ஆதாரங்களை சரியாக மதிப்பீடு செய்யவில்லை” என்றும், “செயல்முறை தவறுகள் நிகழ்ந்துள்ளன” என்றும் வாதிட்டார். ஆனால் கூட்டாட்சி நீதிபதிகள் அவரது குற்றச்சாட்டுகளை “சம்பந்தமற்றவை, சீரற்றவை” எனக் குறிப்பிட்டு முழுமையாக நிராகரித்தனர்.

2024-ஆம் ஆண்டில், ஜெனீவா நீதிமன்றம், 2008-ல் ஒரு ஹோட்டலில் சந்தித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்கும், பாலியல் கட்டாயம் செய்ததற்கும் தாரிக் ரமதானை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. அப்போது, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது; அதில் ஒரு ஆண்டு தண்டனை மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பை கூட்டாட்சி நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், தாரிக் ரமதானுக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்ட ரீதியாக இறுதி நிலையை எட்டியுள்ளது.
© WRS





