சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு எதிரான கொலைகள் அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு எதிரான கொலைகள் அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தில் பெண்கள் மீது நிகழும் கொலைகள் (Femicides) அச்சுறுத்தும் விதத்தில் உயர்ந்து வருகின்றன.
சமீபத்தில், நியுஷாடல் மாநிலம், கொர்செல்ஸ் பகுதியில் நடந்த மும்மடங்கு கொலைச் சம்பவம், இவ்வாண்டு (2025) மட்டும் 22வது பலியாக பதிவாகியுள்ளது என Stop Femicide Project அமைப்பு தெரிவித்துள்ளது.
இத்துறையில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் இல்லாத நிலையில், இந்த அரசு அல்லாத நிறுவனம் குடும்ப வன்கொடுமையுடன் தொடர்புடைய கொலைச் சம்பவங்களை தனிப்பட்ட முறையில் பதிவு செய்து வருகிறது.

ஒப்பீட்டளவில், 2024-ஆம் ஆண்டு 26 பெண்கள் கொல்லப்பட்டனர், 2023-இல் 20 பேர், 2022-இல் 18 பேர் பலியாகினர். ஆனால் இந்த ஆண்டு வேகம் கவலைக்கிடமாக அதிகரித்துள்ளது.
முதல் இரண்டு மாதங்களில் மட்டும் 8 பெண்கள், ஜூன் மாத இறுதி வரை மொத்தம் 18 பெண்கள் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் பிரிபூர் (Fribourg) பகுதியில் நடந்த சம்பவங்கள், பிரஞ்சு பேசும் சுவிட்சர்லாந்தும் இந்த அலைவிலிருந்து விடுபடவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றன.
மனித உரிமை அமைப்புகள், அரசு அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தி வருகின்றன.





