Swiss News In Tamil

ஆர்காவ் கன்டோனில் விபத்து காரணமாக ரயில் போக்குவரத்து தடை.!

ஆர்காவ் கன்டோனில் விபத்து காரணமாக ரயில் போக்குவரத்து தடை.!

வெள்ளிக்கிழமை ஜூலை 25 மாலை, ஆர்காவ் கன்டோனில் உள்ள ஸ்ப்ரைடன்பாக் மற்றும் மேகன்வில் இடையே ஒரு நபரின் விபத்து சம்பவம் காரணமாக  ரயில் போக்குவரத்து தடைபட்டது. சுவிஸ் பெடரல் ரயில்வே அறிவிப்பின்படி, ஆராவ் மற்றும் சூரிச் மைய ரயில் நிலையம் இடையே கிழக்கு-மேற்கு அச்சில் உள்ள பல ரயில் பாதைகள் இந்தத் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன.

f incidente coinvolge una persona traffico ferroviario in tilt 1kdl4

சுவிஸ் பெடரல் ரயில்வே ன் தகவலின்படி, இந்த இடையூறு இரவு 10:00 மணி வரை நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ரயில்களில் பாரிஸ் செல்லும் TGV, பல இன்டர்சிட்டி மற்றும் இன்டர்ரீஜியோ இணைப்புகள் அடங்கும்.

இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை, சுவிஸ் பெடரல் ரயில்வே-ன் இணையதளத்தில், ரயில்களில் தாமதங்கள், ரத்துகள் மற்றும் பாதை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

Related Articles

Back to top button