Swiss News In Tamil

லுசேர்ன்னில் துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை

லூசெர்ன் கன்டோனில் ஜூலை 24, 2025 வியாழக்கிழமை, பிற்பகல், வில்லிசாவில் உள்ள ப்ருக்மாட் 1 இல் அமைந்துள்ள ஒரு வங்கியில் ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.

அடையாளம் தெரியாத குற்றவாளி ஒருவர், ஆயுதத்தைக் காட்டி வங்கி ஊழியரிடம் பணம் கோரி, அறியப்படாத தொகையுடன் தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து காவல்துறை பொதுமக்களிடம் தகவல்களைக் கோரியுள்ளது.

zn9lun4mo9x9tljwtkmt

சம்பவம் நடந்த மாலை 4:00 மணியளவில், குற்றவாளி வங்கியின் கவுண்டர் பகுதிக்குள் நுழைந்து, ஆயுதத்தைப் பயன்படுத்தி ஊழியரை மிரட்டி பணம் கோரியதாகத் தெரிகிறது. அவர் கருப்பு நிற பேன்ட், சாம்பல் நிற ஜாக்கெட் மற்றும் மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. தற்போது மேலதிக விவரங்கள் வெளியிடப்படவில்லை, இது பற்றிய மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றன.

Related Articles

Back to top button