பேர்ணில் வாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்படுத்திய ஓட்டுநர்களுக்கு நடவடிக்கை

வாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்படுத்திய ஓட்டுநர்களுக்கு பேர்ணில் நடவடிக்கை
சுவிட்சர்லாந்தின் Bern நகரில் வாகனம் ஓட்டும் போது மொபைல் தொலைபேசி பயன்படுத்திய ஓட்டுநர்களை இலக்காகக் கொண்டு Bern கன்டோனல் காவல் துறை சிறப்பு போக்குவரத்து சோதனைகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த மே 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை நகரின் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனைகளில், மொத்தம் 21 வாகன ஓட்டுநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வாகனம் செலுத்தும் போது குறுஞ்செய்தி அனுப்புதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டிருந்த ஓட்டுநர்கள், சாலைப் போக்குவரத்து சட்ட மீறலின் கீழ் புகாரளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், 16 பேருக்கு இடத்திலேயே அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதில் சீட்பெல்ட் அணியாமல் ஓட்டுதல், மொபைல் பயன்படுத்துதல் மற்றும் பகல் நேரத்தில் வாகன விளக்குகளை இயக்காமல் பயணம் செய்தல் போன்ற விதிமுறை மீறல்கள் அடங்குகின்றன.
சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்தகைய சோதனைகள் தொடர்ந்தும் நடைபெறும் என Bern கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர்.





