சுவிட்சர்லாந்தில் கிளைடர் விழுந்து நொறுங்கியதில் இருவர் மரணம்
சுவிட்சர்லாந்தில் கிளைடர் விழுந்து நொறுங்கியதில் இருவர் மரணம்
சுவிட்சர்லாந்தில் கிளைடர் விழுந்து நொறுங்கியதில் இருவர் மரணம். சுவிட்சர்லாந்தின் வலெய்ஸ் (Valais) மாநிலத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் ஒரு கிளைடர் (Glider) விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
மரணமடைந்தவர்கள் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த 72 மற்றும் 46 வயதுடையவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்து சிஸ்ட்ஹார்ன் (Chistehorn) பிக்டின் அருகில், நாய்டெர்கெஸ்ட்லின் (Niedergesteln) பகுதியில் நடந்தது.
விபத்தை ஒரு நபர் பார்த்து, அவசர சேவை ரீகாவிற்கு (Rega) உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு முன்பு தகவல் வழங்கியுள்ளார்.

உடனே, ஏர் செர்மாட் (Air Zermatt) ஹெலிகாப்டரில் அவசர சேவை வீரர்கள் அங்கு வந்தனர். ஆனால், கிளைடரில் இருந்த இருவரும் உயிரிழந்ததை கண்டறிந்தனர்.
இந்த கிளைடர், வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு ஆர்காவ் மாநிலத்தின் ஒரு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சுவிஸ் போக்குவரத்து பாதுகாப்பு விசாரணை குழு (Sust) இந்த விபத்து குறித்து விசாரணையை தொடங்கியுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை.





