Swiss News In Tamil
சுவிட்சர்லாந்தில் மின்னல் தாக்கி 21 ஆடுகள் பலி
சுவிட்சர்லாந்தில் மின்னல் தாக்கி 21 ஆடுகள் பலி
சுவிட்சர்லாந்தில் மின்னல் தாக்கி 21 ஆடுகள் பலி ஒப்வால்டன் மாகாணத்தின் கிஸ்வில் பகுதியில் கடந்த திங்கட்கிழமை மின்னல் தாக்கி 21 ஆடுகள் உயிரிழந்ததாக ஒப்வால்டன் விவசாயிகள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
செம்மறி ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்த 2217 மீட்டர் மலை உச்சியில் அமைந்துள்ள சிலுவையில் மின்னல் தாக்கியுள்ளது.

இதனால் அருகில் மேய்ந்துகொண்டிருந்த ஆடுகள் உயிரிழக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





