Swiss News In Tamil

சியோனில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்

சியோனில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்

சியோனில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார் வலாய்ஸ் பகுதியில் உள்ள ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் 34 வயதான உக்ரைன் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக இன்று வியாழன் அன்று வலாய்ஸ் Kontonal  போலீசார் அறிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் சியோனில் உள்ள லெஸ் இல்ஸ் பொழுதுபோக்கு பகுதியில் உள்ள இரண்டு ஏரிகளில் ஒன்றில் இருந்து உயிரற்ற பெண்ணை அவசர சேவையினர் மீட்டனர்.

மூன்றாம் தரப்பினர் திங்கள்கிழமை, தண்ணீரில் கைவிடப்பட்ட தனிப்பட்ட உடமைகளைக் கண்டுபிடித்ததை அடுத்து காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

சியோனில்

இதையடுத்து கன்டோனல் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வலாய்ஸ் மற்றும் ஃப்ரிபோர்க் மாகாண போலீஸ் படைகளை சேர்ந்த சுழி ஓடிகள், பெண்ணின் உடலை 35 மீட்டர் ஆழத்தில் கண்டெடுத்தனர்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, 34 வயதான உக்ரைன் பெண் ஊன்றுகோலை நம்பியிருந்தார் என தெரியவந்துள்ளது. எனினும் என்ன நடந்தது என்பதைத் தெளிவுபடுத்த விசாரணை  மேலதிக விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

©கீஸ்டோன்/SDA

Related Articles

Back to top button