அரசு உதவி பெற்றபோதும் பெரிய சேமிப்பு – தம்பதியருக்கு நீதிமன்ற அபராதம்
அரசு ஓய்வூதியம் மட்டுமே என கூறிய தம்பதியரிடம் ஒரு மில்லியன் ஃப்ராங்குக்கு மேல் சேமிப்பு: வரி ஆய்வில் வெளிச்சம்
சுவிட்சர்லாந்தில் அரசு வழங்கும் குறைந்த அளவிலான ஓய்வூதியத்திலேயே வாழ்ந்து வருகிறோம் என தெரிவித்திருந்த ஒரு தம்பதியர், உண்மையில் ஒரு மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை கடந்த சேமிப்புத் தொகையை வைத்திருந்தது வரி ஆய்வின் போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அரசு சமூக உதவித்தொகை மற்றும் பிற நலத்திட்டங்களுக்காக தகுதி பெற்றதாகக் கூறியிருந்த இத்தம்பதியரின் வங்கிக் கணக்குகள், வழக்கமான வரி தணிக்கையின் போது சோதனை செய்யப்பட்டது. அப்போது அவர்கள் அறிவிக்காத பல கணக்குகள் மற்றும் சேமிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், தவறான தகவல் வழங்கி நிதி பலன் பெற்றதாக அதிகாரிகள் முடிவு செய்தனர்.

நீதிமன்ற தீர்ப்பின்படி, இவர்கள் தலா சுமார் 4,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் மற்றும் நீதிமன்ற செலவினமாக செலுத்த வேண்டும். மேலும், தலா 14,000 ஃப்ராங்குகள் ஒத்திவைக்கப்பட்ட அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்செயல் மீண்டும் நடந்தால் அந்த தொகையும் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தவிர, தவறாக பெற்ற அனைத்து சமூக உதவித் தொகைகளையும் முழுமையாக திருப்பிச் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக நலத்திட்டங்களை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் கடுமையான கண்காணிப்பும் சட்டநடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.
WRS





