Swiss News In Tamil

விமான நிலையத்தை முடக்கிய மர்ம ட்ரோன்… சுவிஸுக்கும் எச்சரிக்கை மணி!

விமான நிலையத்தை முடக்கிய மர்ம ட்ரோன்... சுவிஸுக்கும் எச்சரிக்கை மணி!

விமான நிலையத்தை முடக்கிய மர்ம ட்ரோன்… சுவிஸுக்கும் எச்சரிக்கை மணி!

ஜெர்மனியின் லீப்சிக் விமான நிலையத்தில் வெடிபொருள் பொருத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ட்ரோன் ஒன்று பறந்ததைத் தொடர்ந்து, விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சம்பவம் ஐரோப்பா முழுவதும் பாதுகாப்பு கவலைகளை அதிகரித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதுபோன்ற அச்சுறுத்தல் சுவிட்சர்லாந்திலும் ஏற்படலாம் என்று ETH சூரிச் பல்கலைக்கழகத்தின் ட்ரோன் தொழில்நுட்ப நிபுணர் பேராசிரியர் ரோலண்ட் சீக்வார்ட் எச்சரித்துள்ளார்.

அவரின் கூற்றுப்படி, இன்று பயன்படுத்தப்படும் சிறிய குவாட்காப்டர் ட்ரோன்களை உருவாக்குவதும் இயக்குவதும் மிகவும் எளிதாகிவிட்டது. இணையத்தில் கிடைக்கும் வழிகாட்டுதல்கள் மற்றும் தயாரான உதிரிப்பாகங்களைப் பயன்படுத்தி, சாதாரண தொழில்நுட்ப அறிவுள்ளவர்கள்கூட அவற்றை உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

6a 22

மேலும், சிறிய ட்ரோன்களைக் கண்டறிவதும் தடுக்கவும் மிகவும் கடினம் என்பதால், விமான நிலையங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு அவை புதிய பாதுகாப்பு சவாலாக மாறியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை. இருப்பினும், ரஷ்யா–உக்ரைன் மோதலின் பின்னணியில் இதுபோன்ற நடவடிக்கைகள் ஐரோப்பாவிலும் அதிகரித்து வருவது கவலைக்குரியதாகக் கருதப்படுகிறது.

அதே நேரத்தில், சுவிட்சர்லாந்தில் பயணிகள் உடனடியாக அச்சப்பட வேண்டிய நிலை இல்லை என்றும், அதிகாரிகள் விமான நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களின் பாதுகாப்பைக் கண்காணித்து வருவதாகவும் பேராசிரியர் ரோலண்ட் சீக்வார்ட் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button