லிஸ்டீரியா பாதிப்பு அபாயம்! விற்பனையிலிருந்து சால்மன் மீனை அகற்றிய மைக்ரோஸ்!
லிஸ்டீரியா பாதிப்பு அபாயம்! விற்பனையிலிருந்து சால்மன் மீனை அகற்றிய மைக்ரோஸ்!

லிஸ்டீரியா பாதிப்பு அபாயம்! விற்பனையிலிருந்து சால்மன் மீனை அகற்றிய மைக்ரோஸ்!
சுவிட்சர்லாந்தின் மைக்ரோஸ் நிறுவனத்தில் விற்பனை செய்யப்பட்ட புகையூட்டப்பட்ட சால்மன் மீன் தயாரிப்பில், லிஸ்டீரியா என்ற பாக்டீரியா கண்டறியப்பட்டுள்ளதால், அந்தப் பொருள் உடனடியாக சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் இந்த தயாரிப்பை உட்கொள்ள வேண்டாம் என்று மைக்ரோஸ் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தயாரிப்பை ஏற்கனவே வாங்கியவர்கள், அதை அருகிலுள்ள மைக்ரோஸ் கடையில் திருப்பி ஒப்படைத்து, முழு பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் இந்த பொருளை வாங்கிய வாடிக்கையாளர்களை, பணம் திருப்பித் தரும் நடைமுறை தொடர்பாக மைக்ரோஸ் வாடிக்கையாளர் சேவை நேரடியாக தொடர்புகொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லிஸ்டீரியா என்பது உணவின் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய ஒரு பாக்டீரியா. இது சிலருக்கு காய்ச்சல், தலைவலி, குமட்டல் மற்றும் சளி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே, உங்கள் வீட்டில் மைக்ரோஸ் நிறுவனத்தின் இந்த புகையூட்டப்பட்ட சால்மன் மீன் இருந்தால், அதை பயன்படுத்தாமல் உடனடியாக கடையில் ஒப்படைத்து பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.





