கால்நடைகள் உயிர் தப்பின… ஆனால் களஞ்சியம் முழுவதும் அழிந்தது!
கால்நடைகள் உயிர் தப்பின... ஆனால் களஞ்சியம் முழுவதும் அழிந்தது!

கால்நடைகள் உயிர் தப்பின… ஆனால் களஞ்சியம் முழுவதும் அழிந்தது!
சுவிட்சர்லாந்தின் ஷாஃப்ஹவுசென் மாகாணத்தில் உள்ள ஹெமிஷோஃபென் பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரு பண்ணையின் களஞ்சியம் முழுவதுமாக எரிந்து சாம்பலானது.
இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த ஒருவரை ரெகா மீட்பு ஹெலிகாப்டர் மூலம் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மாலை 5 மணிக்கு முன்பாக தீ விபத்து குறித்து அவசர சேவைகளுக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பல தீயணைப்பு பிரிவுகள் விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்றன.

அவர்கள் சென்றபோது, களஞ்சியம் ஏற்கனவே முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இருப்பினும், தீயணைப்பு வீரர்களின் விரைவான நடவடிக்கையால், தீ அருகிலிருந்த குடியிருப்பு வீட்டிற்கு பரவாமல் வெற்றிகரமாக தடுக்கப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டபோது தொழுவத்தில் இருந்த கால்நடைகளை, அங்கிருந்தவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு மாற்றியதால், அவை உயிர் தப்பின.
இதற்கிடையில், கடும் வெப்பம் காரணமாக தீயணைப்பு பணிகள் மிகவும் சவாலாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பல அவசர மீட்பு குழுக்கள் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டன.
தீ விபத்தால் ஏற்பட்ட சொத்து சேதத்தின் முழு மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து ஷாஃப்ஹவுசென் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.





