சுவிட்சர்லாந்தில் Airbnb தங்கும் வெளிநாட்டவர்களுக்கு கடுமையான கண்காணிப்பு கோரிக்கை
சுவிட்சர்லாந்தில் Airbnb தங்கும் வெளிநாட்டவர்களுக்கு கடுமையான கண்காணிப்பு கோரிக்கை

சுவிட்சர்லாந்தில் Airbnb தங்கும் வெளிநாட்டவர்களுக்கு கடுமையான கண்காணிப்பு கோரிக்கை
சுவிட்சர்லாந்தில் Airbnb போன்ற குறுகிய கால வாடகை தங்குமிடங்களை பயன்படுத்தும் வெளிநாட்டு பயணிகள் மற்றும் விருந்தினர்களின் விவரங்களை மேலும் சிறப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாடாளுமன்றத்தின் மேலவை ஆதரவு தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், நாடாளுமன்ற உறுப்பினரான Mauro Poggia முன்வைத்த தீர்மானம் 20 வாக்குகள் ஆதரவாகவும் 13 வாக்குகள் எதிராகவும் பெற்று நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மூலம், Airbnb உள்ளிட்ட இணையவழி வாடகை தளங்கள் மூலம் சுவிட்சர்லாந்தில் தங்கும் வெளிநாட்டு நபர்கள் தொடர்பான தகவல்களை அதிகாரிகள் மேலும் திறம்பட கண்காணிக்கக்கூடிய நடைமுறைகளை உருவாக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

தனது முன்மொழிவை நியாயப்படுத்திய Mauro Poggia, சில வெளிநாட்டு குற்றவாளிகள் இத்தகைய வாடகை தளங்களை பயன்படுத்தி சுவிட்சர்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பதாகவும், இதனால் பாதுகாப்பு அமைப்புகளுக்கு சவால்கள் உருவாகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
“இது வெறும் நிர்வாகப் பிரச்சினை அல்ல. தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய ஒரு விடயமாகும்,” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் Airbnb போன்ற தளங்கள் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதேவேளை, பாதுகாப்பு, பதிவு நடைமுறைகள் மற்றும் தங்கும் நபர்களின் அடையாள சரிபார்ப்பு தொடர்பான கேள்விகளும் அண்மைக் காலங்களில் அதிகம் எழுந்து வருகின்றன. இதன் பின்னணியில், வெளிநாட்டு விருந்தினர்கள் தொடர்பான கண்காணிப்பு முறைகளை மேம்படுத்துவது குறித்து அரசியல் மட்டத்தில் விவாதம் தீவிரமடைந்துள்ளது.





