365 நாட்கள் திறந்திருக்கும் பனிச்சறுக்கு மையம் மூடப்பட்டது! காரணம் – சுவிட்சர்லாந்தை வாட்டும் வெப்பம்!
365 நாட்கள் திறந்திருக்கும் பனிச்சறுக்கு மையம் மூடப்பட்டது! காரணம் – சுவிட்சர்லாந்தை வாட்டும் வெப்பம்!

365 நாட்கள் திறந்திருக்கும் பனிச்சறுக்கு மையம் மூடப்பட்டது! காரணம் – சுவிட்சர்லாந்தை வாட்டும் வெப்பம்!
சுவிட்சர்லாந்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் அதிக வெப்பம், தற்போது சேர்மாட்டின் பிரபலமான கோடைகால பனிச்சறுக்கு நடவடிக்கைகளையும் பாதித்துள்ளது!
உலகப் புகழ்பெற்ற தியோடுல் பனிப்பாறையில், ஆண்டு முழுவதும் நடைபெறும் கோடைகால பனிச்சறுக்கு சேவையை, சேர்மாட் மலை ரயில்வே நிறுவனம் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இதற்குக் காரணமாக, தொடர்ச்சியான அதிக வெப்பநிலை, இரவு நேரங்களில் போதிய குளிர்ச்சி இல்லாமை, அடிக்கடி பெய்யும் இடியுடன் கூடிய மழை மற்றும் பனிப்பாறையின் மாறிவரும் நிலை ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலைகளால், விருந்தினர்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான பனிச்சறுக்கு அனுபவத்தை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், பனிப்பாறையில் இயங்கும் போக்குவரத்து வசதிகளை பராமரிப்பதும் தற்போது மிகவும் சவாலாக மாறியுள்ளது.
“எங்கள் விருந்தினர்களின் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பே எங்களின் முதல் முன்னுரிமை” என்று சேர்மாட் மலை ரயில்வே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்ட்டின் ஹக் தெரிவித்துள்ளார்.

எனினும், குறிப்பிட்ட சில சுவிஸ் தேசிய பனிச்சறுக்கு அணிகளின் வீரர்களுக்கு மட்டும் பயிற்சியைத் தொடர சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பனிப்பாறையின் நிலைமை தினமும் கண்காணிக்கப்பட்டு மறுமதிப்பீடு செய்யப்படுவதாகவும், சூழ்நிலைகள் சாதகமாக மாறியவுடன் கோடைகால பனிச்சறுக்கு சேவைகள் உடனடியாக மீண்டும் தொடங்கப்படும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதிகரித்து வரும் வெப்ப அலை, சுவிட்சர்லாந்தின் பனிப்பாறை சுற்றுலாவிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை கவலை அளிக்கிறது.






