Local Swiss News

பகல் நேரத்தில் நடந்த அதிர்ச்சி தாக்குதல்! சூரிச் நகரில் பதற்றம்!

பகல் நேரத்தில் நடந்த அதிர்ச்சி தாக்குதல்! சூரிச் நகரில் பதற்றம்!

பகல் நேரத்தில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதன்கிழமை பிற்பகல், சூரிச் நகரின் 11-வது மாவட்டமான சாண்டாக்கர் Sandacker பகுதியில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில், 31 வயதுடைய ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.

பிற்பகல் சுமார் 2 மணி 30 நிமிடத்திற்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, சூரிச் நகர காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

a11 33
Staatsanwaltschaft und Polizei ermitteln wegen eines Angriffs mit einer Stichwaffe am Mittwoch in Zürich. Ein Verletzter wurde ins Spital gebracht. (Symbolbild)

அங்கு வெட்டுக்காயங்களுடன் இருந்த இளைஞருக்கு மருத்துவ உதவியாளர்கள் முதலுதவி வழங்கி, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சம்பவம் தொடர்பாக 55 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிரியா நாட்டைச் சேர்ந்த இந்த நபர், தனது வீட்டிலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்ப தகவல்களின்படி, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எனினும், சம்பவத்திற்கான துல்லியமான காரணம் என்ன? தாக்குதலுக்கு வழிவகுத்த பின்னணி என்ன? என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

தற்போது சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சம்பவத்தின் முழு உண்மையையும் கண்டறிய போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button