லுசேர்ன் கன்டோனில் சந்தேக திருடர்கள் மூவர் கைது – போலீஸ் நாய் உதவியுடன் அதிரடி நடவடிக்கை

லுசேர்ன் கன்டோனில் சந்தேக திருடர்கள் மூவர் கைது – போலீஸ் நாய் உதவியுடன் அதிரடி நடவடிக்கை
சுவிட்சர்லாந்தின் லுசேர்ன் கன்டோனிலுள்ள Mosen பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Luzerner Polizei வெளியிட்ட தகவலின்படி, அதிகாலை சுமார் 3 மணியளவில் அப்பகுதி மக்கள் மூன்று சந்தேகத்திற்கிடமான நபர்கள் சுற்றித்திரிவதை கவனித்து போலீசாருக்கு தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அங்கு சந்தேகத்திற்கிடமான வாகனம், திருடப்பட்டிருக்கலாம் என கருதப்படும் பொருட்கள் மற்றும் அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் உடைப்பு சம்பவம் இடம்பெற்றிருந்ததை கண்டறிந்தனர். ஆனால் சந்தேகநபர்கள் அங்கு இல்லாமல் தப்பிச் சென்றிருந்தனர்.

இதையடுத்து போலீஸ் சேவை நாய் “Halen” உதவியுடன் தடயவியல் தேடுதல் ஆரம்பிக்கப்பட்டது. நாயின் உதவியால் சந்தேகநபர்களின் தடம் Beinwil am See பகுதி வரை கண்டறியப்பட்டது.
Aargau கன்டோனல் போலீசார் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் சந்தேகத்திற்கிடமான கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் Kosovo நாட்டைச் சேர்ந்த 29, 35 மற்றும் 37 வயதுடைய ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.





