சுவிட்சர்லாந்தில் குடியுரிமை விண்ணப்ப நடைமுறை டிஜிட்டல் மயமாகிறது
சுவிட்சர்லாந்தில் குடியுரிமை விண்ணப்ப நடைமுறை டிஜிட்டல் மயமாகிறது

சுவிட்சர்லாந்தில் குடியுரிமை விண்ணப்ப நடைமுறை டிஜிட்டல் மயமாகிறது…
சுவிட்சர்லாந்தில் குடியுரிமை (Naturalisation) பெறும் நடைமுறையை மேலும் எளிமையாக்கும் நோக்கில், மத்திய அரசு ஆகஸ்ட் 1 முதல் அதன் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் முதல் கட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பின்படி, இனிமேல் குடியுரிமை தொடர்பான தகவல் பரிமாற்றங்கள் பொறுப்பான கான்டன் அதிகாரிகளுக்கும், குடியேற்றத்திற்கான மாநிலச் செயலகமான State Secretariat for Migration (SEM) அமைப்பிற்கும் இடையில் தபால் மூலமாக அல்லாமல், பாதுகாப்பான டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும்.

இந்த புதிய திட்டத்தின் மூலம் அதிகாரிகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றம் வேகமாகவும், திறமையாகவும் நடைபெறும் என அரசு நம்புகிறது. அதேவேளை, Swiss குடியுரிமைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் செயல்முறையும் Central Migration Information System (ZEMIS) எனப்படும் மத்திய குடியேற்ற தகவல் அமைப்பின் புதிய டிஜிட்டல் தளத்தின் மூலம் மேம்படுத்தப்பட உள்ளது.
இந்த டிஜிட்டல் முறை முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில கான்டன்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். சோதனை காலம் வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர், சுவிட்சர்லாந்தின் ஏனைய அனைத்து கான்டன்களும் இந்த புதிய முறைமைக்கு இணைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குடியுரிமை விண்ணப்ப செயல்முறையை வேகப்படுத்துவதுடன், ஆவண பரிமாற்றத்தை பாதுகாப்பாக மாற்றி, நிர்வாகச் சுமையைக் குறைப்பதே இந்த டிஜிட்டல் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். எதிர்காலத்தில் குடியுரிமை விண்ணப்பதாரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மேலும் வசதியான, வெளிப்படையான மற்றும் நவீன சேவையை வழங்கும் வகையில் இந்த மாற்றம் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.





