துர்காவ் கன்டோனில் கார் திருட்டு முயற்சி: 29 வயது நபர் கைது
துர்காவ் கன்டோனில் கார் திருட்டு முயற்சி: 29 வயது நபர் கைது

துர்காவ் கன்டோனில் கார் திருட்டு முயற்சி: 29 வயது நபர் கைது
துர்காவ் (Thurgau) கன்டோனிலுள்ள பெர்க் (Berg) பகுதியில் கார் ஒன்றை சோதனை செய்து பொருட்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் நபரை துர்காவ் கன்டோனல் போலீசார் கைது செய்துள்ளனர்.
சனிக்கிழமை அதிகாலை 12 மணிக்கு பின்னர், நியூவீஸ்ஸ்ட்ராஸே (Neuwiesstrasse) பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் கார் ஒன்றை திறந்து அதிலிருந்து பொருட்களை எடுத்துச் சென்றதாக கன்டோனல் அவசர அழைப்பு மையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்ட துர்காவ் கன்டோனல் போலீசாரின் ரோந்து குழு, குறுகிய நேரத்திலேயே பெர்க் ரயில் நிலையம் அருகே சந்தேகநபரை கைது செய்தது.
திருடப்பட்ட பொருட்களும் சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 29 வயதுடைய மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாக துர்காவ் கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்: துர்காவ் கன்டோனல் போலீசார்





