ஜெனீவா நிலத்தடி வாகன தரிப்பிடத்தில் நான்கு மாதங்களாக வாழும் காட்டுயிர்
ஜெனீவா நிலத்தடி வாகன தரிப்பிடத்தில் நான்கு மாதங்களாக வாழும் காட்டுயிர்

ஜெனீவா நிலத்தடி வாகன தரிப்பிடத்தில் நான்கு மாதங்களாக வாழும் காட்டுயிர்
ஜெனீவாவின் Cornavin பகுதியில் உள்ள நிலத்தடி வாகன தரிப்பிடத்தில் சிறிய காட்டுயிர் ஒன்று கடந்த நான்கு மாதங்களாக வாழ்ந்து வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
20 Minutes வெளியிட்ட தகவலின்படி, “Marten” எனப்படும் காட்டு விலங்கு பல பயனர்களால் அங்கு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், ஜெனீவா Parking Foundation அதன் இருப்பை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த வாகன தரிப்பிடத்தில் அதிக அளவில் புறாக்களும் வாழ்ந்து வருவதால், அவை அந்த விலங்கிற்கு எளிதான உணவூற்றாக மாறியிருக்கலாம் என கருதப்படுகிறது.

இதேவேளை, இந்த ஆண்டின் இலையுதிர் காலம் வரை எந்த தலையீடும் மேற்கொள்ளப்படமாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காரணம், இந்த விலங்கின் இனப்பெருக்க காலம் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நீடிப்பதால், அதன் வாழ்விடத்தை பாதிக்க விரும்பவில்லை என கூறப்பட்டுள்ளது.
மேலும், வாகனங்களுக்கு சேதம் ஏற்படுவது தொடர்ச்சியான பிரச்சினையாக இல்லை என்றும், பொதுமக்களுக்கு எந்த அபாயமும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திறந்த அமைப்பில் உள்ள வாகன தரிப்பிடங்கள் இயற்கையாகவே சில காட்டுயிர்களை ஈர்க்கக்கூடும் என்றும் அவர்கள் விளக்கியுள்ளனர்.
©WRS





