சூரிக்கில் போலீசார் மீது கற்கள், பாட்டில்கள் வீச்சு – அதிகாரி ஒருவர் காயம்
சூரிக்கில் போலீசார் மீது கற்கள், பாட்டில்கள் வீச்சு – அதிகாரி ஒருவர் காயம்

சூரிக்கில் போலீசார் மீது கற்கள், பாட்டில்கள் வீச்சு – அதிகாரி ஒருவர் காயம்
சூரிக் (Zürich) நகரில் சத்த தொந்தரவு புகாரை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மீது குழுவொன்று கற்கள் மற்றும் பாட்டில்களை வீசியதால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
Stadtpolizei Zürich தெரிவித்த தகவலின்படி, சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணிக்குப் பின்னர் Kasernenwiese பகுதியில் இடம்பெற்றது.
சத்தம் தொடர்பான புகாரை தொடர்ந்து அங்கு சென்ற போலீஸ் ரோந்து குழு, பெரிய குழுவொன்றுடன் பேச முயன்றபோது திடீரென சூழப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதன்பின், போலீசார் மீது பாட்டில்களும் கற்களும் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, போலீசார் பின்வாங்கி கூடுதல் படையினரை அழைத்ததுடன், ரப்பர் குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை போன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் பயன்படுத்தினர்.
பின்னர், பெரிய குழுவொன்று Zeughaus மற்றும் Kasernen பகுதியிலிருந்து Militärstrasse நோக்கி நகர்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், புதிதாக திரட்டப்பட்ட போலீஸ் படையினரால் அந்த குழு தடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது தண்ணீர் பீரங்கி வாகனமும் போலீஸ் நாய்களும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து போலீசார் மீது பொருட்களை வீசியதாகவும், அதில் ஒன்று போலீஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கி லேசான காயம் ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு போலீஸ் வாகனமும் சேதமடைந்துள்ளது.
நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் மீண்டும் ரப்பர் குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை பயன்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
இறுதியில், அந்த குழு Langstrasse பகுதி நோக்கி சிதறிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
© Kapo ZH






