Swiss News In Tamil

மேயர் பதவிக்கு மீண்டும் போட்டியிட போவதில்லை – கொரினே மவூச்

மேயர் பதவிக்கு மீண்டும் போட்டியிட போவதில்லை – கொரினே மவூச்

சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நகரமான சூரிச்சின் மேயராக உள்ள கொரினே மவூச், 2026 மார்ச் மாதம் நடைபெறும் நகராட்சி தேர்தலில் மீண்டும் போட்டியிட மாட்டேன் என அறிவித்துள்ளார்.

2009 மார்ச் மாதம் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட மவூச், தொடர்ந்து நான்கு முறை மீண்டும் வெற்றி பெற்று பதவியில் நீடித்து வருகிறார். அமெரிக்காவின் Iowa நகரில் பிறந்த மவூச், மே 28 அன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

2009ஆம் ஆண்டு இடைத் தேர்தலில் வெற்றி பெற்று எல்மார் லேடர்கெர்பரை தொடர்ந்து மேயர் ஆனார். பின்னர் 2010, 2014, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் வெற்றி பெற்றார்.

மேயர் பதவிக்கு

“மேயராக பணியாற்றுவது பெருமை அளிப்பதாகவும், இன்னும் முழு உற்சாகத்துடன் செயல்பட்டு வருவதாகவும்” என தெரிவித்துள்ளார். சூரிச் நகரம் இன்று பலத்துடனும் வளத்துடனும் மற்றும் ஒருமைப்பாட்டுடனும் உள்ளது. அதை அப்படியே வைத்திருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

மவூச், சூரிச்சின் முதல் பெண் மேயராகவும், தான் ஓரினச் சேர்க்கையாளர் என்பது பற்றிய தகவலை பகிரங்கமாக வெளிப்படுத்திய முதல் மேயராகவும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.

அவரது தாயார் உர்ஸுலா மவூச், ஆர்காவ் மாநில பாராளுமன்றத்தில் முதல் பெண் உறுப்பினராகவும் (1979-1995), ஆர்காவ் மாநில அரசாங்கத்திற்கு முதல் பெண் வேட்பாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button