Swiss News In Tamil

சுவிஸ் எல்லையில் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

சுவிஸ் எல்லையில் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு.!! இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். பனிச்சரிவு ஏற்பட்டதை நேரில் பார்த்தவர்கள் மூலம் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை வடக்கு இத்தாலிய பிராந்தியமான பீட்மாண்டில் உள்ள டிராஸ்குவேராவில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஐந்து பேர் புதைக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மற்ற 2 பேரும் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சுவிஸ்

அவர்கள் காயமின்றி இருந்தனர், ஆனால் அதிர்ச்சியடைந்ததாக மீட்பு சேவைகள் தெரிவித்தன. உயிரிழந்தவர்களின் விபரங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

2850 மீட்டர் உயரமுள்ள வால்கிராண்டேயின் கிழக்கு முகடு பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இப்பகுதி சுவிட்சர்லாந்தின் எல்லையில் அமைந்துள்ளது. பனிச்சரிவு ஏற்பட்டதை நேரில் பார்த்தவர்கள் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, 2100 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் உள்ள பகுதியில் பனிச்சரிவு அபாயம் உள்ளது என தெரிவித்தனர்.

Related Articles

Back to top button